சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி 1000 ஆசிரியர்கள் தொடக்க கல்வித்துறையில் நியமிக்கப்படுவார்கள். தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நியமனங்கள் 2012-2013ம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் விருப்பம் உள்ளவர்களை தேர்வு செய்யவும் ஏற்பாடு செய்திருந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றில் காலியாக உள்ள இடங்கள் குறித்தும் ஆகஸ்ட் 10, 26, 27 ஆகிய தேதிகளில் பட்டியல் வெளியானது. மேலும், சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களில் அதற்கான ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெயிடப்பட்டது.
சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர்கள் 1000 பேர் பிசி, எம்பிசி நலத்துறையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான சான்று சரிபார்ப்பு நடத்திய பிறகே சிறுபான்மை மொழிப்பாட ஆசிரியர்கள் அந்தந்த துறையில் நியமிக்கப்படுவார்கள். இதையடுத்து மேற்கண்ட பட்டியல்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில்நேற்று வெளியிட்டது. சிறுபான்மை மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் தகுதி குறித்து இணைய தளத்தில் சரிபார்த்துக் கொள்ள லாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை