* பட்டாசு வெடிக்கும்போது உடையில்தீப்பற்றிக் கொண்டால் உடனே ஓடுதல் கூடாது.தரையில் படுத்து உருண்டு புரளவேண்டும். அப்போதுதான் தீ அணையும். ஓடுவதுதீயை அதிகரிக்கவே செய்யும்.
* தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீர் ஊற்றி, மெல்லியதுணியால் மூடி உடனே மருத்துவமனைக்குஅழைத்துச் செல்ல வேண்டும்.
* தீயணைப்புத் துறை நிலையங்களின் எண்கள்,மருத்தவர்களின் தொலைபேசி எண்களை தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. அவசரத்தேவைக்கான எண்களை எழுதி வைத்துவீட்டில் சுவற்றில் ஒரு இடத்தில் ஒட்டிவைப்பது நல்லது.
* குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்கஅனுமதிக்கக் கூடாது. பெரியவர்கள் உடன்இருப்பது பாதுகாப்பானது.
* பட்டாசுகளை பாக்கெட்டில் வைத்துக்கொள்வது ஆபத்தானது. நமக்கே தெரியாமல் அதில்நெருப்பு பட்டுவிட்டால் ஆபத்தாகிவிடும்.
* நெரிசலான சந்துகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மத்தியிலும் சரவெடிகள் வெடிப்பது ஆபத்தானது.
* பட்டாசுகள் வெடிக்கும்போது தளர்ந்த ஆடை, நைலான்,பாலிஸ்டர் துணிகளை உடுத்திக்கொள்ளக் கூடாது.இறுக்கமான ஆடைகள், பருத்தி ஆடைகள்மட்டுமே அணிய வேண்டும்.
* பட்டாசு கொளுத்துவதற்கு முன்புஒரு வாளியில் தண்ணீரை அருகிலேயே வைத்திருக்கவேண்டும். எரிந்து முடிந்த மத்தாப்புகம்பி, பட்டாசுகளை நீர் உள்ள வாளியில்அல்லது உலர்ந்த மண்ணில் போட்டுமூடி வைக்க வேண்டும்.
* பட்டாசு வெடிப்பதற்று தீப்பெட்டியைப்பயன்படுத்த வேண்டாம், நீளமான ஊதுபத்திகளைப் பயன்படுத்தவேண்டும்.
* ராக்கெட் போன்ற வெடிகள் அதிகவிபத்துகளை ஏற்படுத்தும். அதனால் ராக்கெட்டை வெடிக்காமல்இருப்பது நல்லது. அதை மீறிவெடிக்க விரும்புகிறவர்கள் மைதானங்களில் வெடிப்பது நல்லது.
* செருப்புகளை அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிப்பது நல்லது.
* பட்டாசுகளை பாட்டில்களில் வைத்து வெடிப்பது அபாயகரமானது.உடையும் கண்ணாடி சில்லுகள் உடலில்காயங்களை ஏற்படுத்துவதோடு நம் அருகில் இருப்பவர்களுக்கும்ஆபத்தை விளைவிக்கும்.பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதைவிட, வெடிக்காமல்இருப்பதே நல்லது. பட்டாசுகளால் ஏற்படும்புகையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதோடு, பட்டாசுபுகையால் ஆஸ்துமா, அலர்ஜி, நுரையீரல் சம்பந்தப்பட்டநோய்கள் ஏற்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை