தமிழக அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், துறை அமைச்சரை சந்தித்து, 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தினர். சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடைசியாக பெற்ற சம்பளத்தில், 60 சதவீதம் அல்லது குறைந்தபட்சம், 3,500 ரூபாய், ஆகிய இரண்டில், அதிகமானத் தொகையை, ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
அங்கன்வாடி குறு மையங்களை, முதன்மை மையங்களாக மாற்றம் செய்து, அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராடி வருகின்றனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வளர்மதி, துறை செயலர் பஷீர் அகமது ஆகியோரை சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை