பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையரும், பேரிடர் மேலாண்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான டி.எஸ். ஸ்ரீதர் கூறினார்.
இதில் டி.எஸ். ஸ்ரீதர் பேசியது: சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. அதே நேரம், வாகனங்களின் சராசரி வேகமும் இப்போது அதிகரித்து விட்டது. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் சாதாரணமாக 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் நகரங்களுக்குள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் போக்குவரத்து கட்டமைப்புகளோ, பாதுகாப்பு நடைமுறைகளோ இன்னும் மேம்படவில்லை. சாலைப் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வும் மக்களிடையே பெரிய அளவில் எழவில்லை. எனவேதான் சாலை விபத்துகள், ரயில் விபத்துகள் போன்ற போக்குவரத்துப் பேரிடர்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இதுதவிர இயற்கைப் பேரிடர்களாலும் பெரும் பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். இதுபோன்ற பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக மக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்குப் பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, பேரிடர் மேலாண்மை, புனரமைப்புத் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அக்டோபர் மாதத்திலேயே அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக, இந்தத் திட்டம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் பேரிடர்களால் ஏற்படும் இழப்பை குறைக்க முடியும் என்றார்.
கருத்தரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் பி. வணங்காமுடி, பேராசிரியர்கள் டி. கோபால், ஏ. ரகுநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை