இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 85 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார, சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்காகத் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு ஆகிய அறிமுக வகுப்புகளில் 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 1.20 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2013-14 ஆம் கல்வியாண்டில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பாக அதிகாரிகள் கூறியது: இந்த ஆண்டு (2014-15) 85 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கட்டணமாக மத்திய அரசிடமிருந்து ரூ.40 கோடி கோரப்பட்டுள்ளது. இந்தத் தொகை கிடைத்தவுடன் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும்.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் ரூ.25 கோடி வழங்கப்பட வேண்டும். இந்தக் கட்டணமும் மத்திய அரசிடமிருந்து பெற்று வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை