ஜெயலலிதாவை சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி, கோவை மண்டலத்திலுள்ள தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகளை நாளை மூட, கோவை மண்டல தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகளின் நிர்வாகிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய, கோவை மண்டலத்தில், 120 தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி, தமிழகத்தில் உள்ள, பல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.இந்நிலையில், கோவை மண்டலத்திலுள்ள தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள், நாளை செயல்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மண்டல தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் நிர்வாகிகள் கூட்டமைப்பின் செயலாளர் நடேசன் கூறுகையில், ''ஜெ.,வை விடுவிக்கக் கோரி, கோவை மண்டலத்தில் செயல்படும் தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகளை, 7ம் தேதி மூட முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை