என்னை சர்வதேச அளவில் புகழ் பெறவைத்த ஆசிரியர் ராஜரத்தினத்தையும், அவரைப் போன்ற எண்ணற்ற ஆசிரியர்களையும் நினைவு கொள்வதில் பெருமையடைகிறேன். ராஜரத்தினம் ஓர் பள்ளி ஆசிரியர் அல்ல. என்னைப் போன்ற படிப்பில் பின்தங்கியவர்களுக்காகவே டியூசன் சென்டர் நடத்தி அறிவை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்த உயரிய மனிதர்.
'சக்சஸ்' படிப்பு:
படிப்பில் பின்தங்கிய என்னை போன்றோரை அவர் எப்படி மாற்றினார்? அதிகாலை 5 மணிக்கு அவரிடம் இருக்க வேண்டும். புத்துணர்ச்சியோடு உள்ள மூளைக்கு அவர் கொடுக்கும் அறிவு, அவர் அளிக்கும் முறை எண்ணற்றோரை சர்வதேச அளவில் புகழ்பெற வைத்து விட்டது. அப்படி என்ன தான் கற்றுக் கொடுக்கும் முறை அவரிடம்? கையில் பிரம்பு இருக்கும். அடிக்க மாட்டார். எழுதி, எழுதி பார்க்க வேண்டும். அதை நாமே திருத்த வேண்டும். இது தான் அவர் கற்பித்த 'சக்சஸ்' முறை. மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுப்பது சரியல்ல என்பார். எழுதி, எழுதி பார்க்கும் போது, மறக்காமல் மனதிற்குள் ஏறும். எழுத்து பிழைகளை நாம் திருத்திக் கொள்ளலாம். கடைசி நிமிடம் வரை தேர்வு எழுதாதே. கடைசி 15 நிமிடம் எழுதியதை சரிபார்த்து நீயே பிழைகளை திருத்திவிடு. மதிப்பெண் அள்ளலாம், என்பார். இது நுாறு சதவீத வெற்றியை கொடுத்தது.
ஓர் சாதாரண நான்கு முழ வேட்டி, சட்டையில் அவரைப் பார்த்தால் அதிகம் படித்தவர் என்று யாரும் கூறமாட்டார்கள். அவரை நாங்கள் 'சார்' என்று அழைத்ததே இல்லை. 'அண்ணன்' என்று தான் அழைப்போம். எல்லோரையும் ஏணியில் ஏற்றி விட்டு கடைசி வரை அவர் ஓர் சாதாரண மனிதராக தியாக செம்மலாகவே இறந்தார். அவர் ஏற்றிவிட்ட நான், டாக்டரான பின் நான் படித்த டியூசன் சென்டருக்கே, சிறப்பு விருந்தினராக சென்றது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பெருமைமிகு நிகழ்வு. சர்வதேச அளவில் எண்ணற்ற ராஜரத்தினங்கள், லட்சக்கணக்கானோரை உயர்த்திவிட்டிருக்கிறார்கள். உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச ஆசிரியர் தினமான இன்று இது போன்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பொற்பாதங்கள் தொட்டு வணங்குவதோடு, அவர்களும் எங்களைப் போல் எல்லா வகைகளிலும் உயர்ந்து, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்த வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை