மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் உதவிப் பேராசிரியர் தகுதித்தேர்வு அல்லது இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித்தேர்வு டிசம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 79 பாடங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயின்ற, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வை எழுத விரும்புவோர் www.cbsenet.nic.in இணையதளத்தில் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வருகைச்சீட்டு, வங்கிச் செலுத்துச்சீட்டு, ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிச் சான்றித் மற்றும் முதுநிலைப் படிப்புக்கான உரிய சான்றிதழ்களுடன் ஒருங்கிணைப்பாளர், விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 என்ற முகவரிக்கு நவம்பர் 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சிபிஎஸ்இ இணையத் தளத்தில் பதிவு செய்யப்படாத மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அனுமதிச் சீட்டு, வங்கிச் செலுத்துச் சீட்டின் நகலை தேர்வ நாளன்று கொண்டு வர வேண்டும். தேர்வை எழுத விரும்புவர்கள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை