சித்த மருத்துவம் உட்பட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும், 17ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவித்துஉள்ளது.
தமிழகத்தில், சென்னை - அரும்பாக்கம், நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம், கன்னியாகுமரி - நாகர்கோவில் என, நான்கு இடங்களில், இந்திய மருத்துவம் சார்ந்த, ஆறு மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன.இதில், சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, யோகா போன்ற படிப்புகளுக்கு, 325 இடங்கள் உள்ளன. இதுதவிர, 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,500க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த படிப்புகளுக்கான விண்ணப்பம், ஜூலையில் பெறப்பட்டாலும், மாணவர் சேர்க்கைக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததால், கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரி களில், மாணவர் சேர்க்கைக்கு, அங்கீகாரம் கிடைத்த நிலையில், கலந்தாய்வு, 17ம் தேதி துவங்குகிறது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லுாரி வளாகத்தில், கலந்தாய்வு, 20ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.இந்த படிப்புகளுக்கு, மொத்தம், 3,768 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 3,665 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தினமும், 1,000 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்படவுள்ளனர்.
விண்ணப்பதாரர்களுக்கு, அழைப்பு கடிதம் அனுப்பட்ட நிலையில், எஸ்.எம்.எஸ்., மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்காத வர்கள், இயக்குனரகத்தின் இணையதளம் மூலம் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை