மொடக்குறிச்சி அருகே, நாதகவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடனமாடியபடியே திருக்குறளை பாடலாகப் பாடி மாணவ, மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கற்பித்தார்.
கரூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் சுந்தர மகாலிங்கம். இவர், நாதகவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவ, மாணவிகளுக்கு நடனமாடியபடியே திருக்குறள் பாடத்தை கற்பித்தார். மேலும், குறள்களுக்கு நடனமாடி கற்பிக்கும் முறை குறித்தும் அவர் பயிற்சியளித்தார்.
இவர், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பாட்டுப் பாடியே தமிழ் வகுப்புகளை நடத்துவாராம். இதனால் பள்ளி மாணவ, மாணவியரிடையே தமிழ்ப் பாடங்கள் மீது மிகுந்த ஆர்வத்தை உண்டானதாகத் தெரிவித்தார்.
அவரது அனுபவங்கள் குறித்து கேட்டபோது, 18 ஆண்டுகளாக 1,661-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 7 பல்கலைக் கழகங்களுக்கும் சென்று பயிற்சி அளித்துள்ளதாகவும், தனது சிறு வயதிலேயே நடனம் கற்றுக்கொண்டதாகவும், பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றது முதல் மாணவ, மாணவிகளுக்கு நடனமாடி திருக்குறள் கற்பிக்கும் முறை குறித்து பயிற்சியளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக பள்ளியின் இடைநிலை ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, பொம்மலாட்டம் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை நடத்தினார். பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை