கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 312 பேருக்கு இன்று கடலூரில் கலந்தாய்வு நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கான கலந்தாய்வு கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலத்தில் இன்று காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் தேர் ச்சி பெற்ற 312 பேரில் தமிழில் 10 பேரும், ஆங்கிலத்தில் 101, கணிதத்தில் 31, அறிவியலில் 63, சமூக அ றிவியலில் 107 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தேவையான இடங்களை விட கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இந்த இரு பாடங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் பணி வாய்புகள் குறைவாகவே உள்ளது. இதனால் இங்கு பணி கிடைக்காதவர்களுக்கு விழுப்புரம், நாகை, அரியலூர் மாவட்டங்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வில் பணி வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகிறது. இதற்கு மாறாக தமிழ், ஆங்கிலம் சமூக அறிவியல் பாடங்களில் தேவைக்கு குறைவானர்களே தேர்ச்சி பெற்றுள்ளதால் இந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்டத்திலேயே பணி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, மாவட்டத்தில் தமிழ் பாடத்திற்கு 40க்கும் மேற்பட்ட இடங்களும், ஆங்கிலத்தில் 120க்கும் மேற்பட்ட இடங்களும், சமூக அறிவியல் பாடத்திற்கு 200க்கும் மேற்பட்ட இடங்களும் காலியாக உள்ள நிலையில் இந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவாக இருப்பதால், இந்த பாடங்களுக்கான காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை