'காலியாக உள்ள பணியிடங்களை, அரசாணைப்படி, நிரப்ப வேண்டும்' என, அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
முதல்வர் அலுவலகத் தில் கொடுத்த, மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2012ல், 451 உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட, 753 பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதி அளித்தது. அதன்படி, காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வுக்கான பணிகளும் துவக்கப்பட்டன. தகுதி வாய்ந்த நபர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடந்தது. அதன்பின் அப்பணி நிறுத்தப்பட்டு விட்டது. அடுத்து, 2013ல், 116 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு ஏற்கனவே வெளியிட்ட அரசாணையின்படி, உடனடியாக மாநில பதிவு மூப்பு பட்டியல் வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி நியமனம் வழங்க, முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை