திருமணம் முடிந்தவுடன், மனைவியுடன் வந்து, ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில், வாலிபர் பங்கேற்றார். சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் ஜெயபால், 30. இவருக்கும், ஆனந்தீஸ்வரி என்ற பெண்ணுக்கும், கோட்டை ஈஸ்வரன் கோவிலில், நேற்று திருமணம் நடந்தது. திருமணம் முடித்தவுடன், மனைவியை அழைத்து கொண்டு, சேலம், சிறுமலர் பள்ளியில் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்றார்.
மணக்கோலத்தில் வந்தவரை, அங்கிருந்தவர்கள், ஆச்சர்யத்துடன் பார்த்தனர். விழுப்புரம் மாவட்டம், பெரிய தச்சூர் பள்ளியில், பணிபுரிய நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதுகுறித்து, ஜெயபால் கூறியதாவது:கலந்தாய்வு பற்றி, 28ம் தேதி இரவு தான் தெரியும். திருமணம் முடிந்தவுடன், மனைவியை தனியாக விட்டு வருவதற்கு மனம் வரவில்லை. அதனால், கார் மூலம் கலந்தாய்வில் பங்கேற்றேன்.இவ்வாறு ஜெயபால் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை