ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட, 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசிடம், தமிழக அரசு செலுத்தவில்லை என்ற தகவல், அரசு ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க, அதிகாரிகள் முன்வராதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த, 2003, ஏப்ரல் 1ம் தேதிக்கு பின், அரசுப் பணியில் சேருவோருக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, முதல் மாநிலமாக, தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
கடந்த, 2006 ஜூன் 1ம் தேதியில் இருந்து, அரசு ஊழியர் சம்பளத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. இத்தொகையை, மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு செலுத்தாமல் உள்ளது.
இது குறித்து, திண்டுக்கலை சேர்ந்த, பிரடெரிக் ஏங்கல்ஸ், மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, 'தமிழக அரசு பிடித்தம் செய்த தொகையை, ஆணையத்திடம் வழங்கவில்லை' என, தெரிவித்துள்ளது. இது குறித்து, நேற்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இத்தகவல், அரசு ஊழியர்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, யாருக்கும் தகவல் தெரியவில்லை. நிதித்துறை சார்பு செயலர், இணை செயலர் ஆகியோரிடம் கேட்டபோதும், தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். செயலர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. முதல்வர் அலுவலகத்திற்கு சென்று விட்டதாக, அவர்களின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை