புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தப்பட்ட பழிக்கு, வழங்கப்பட்ட அநீதியை கண்டித்து விழுப்புரத்தில் இன்று உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் திரு.சே.ஜார்ஜ் அவர்கள் கலந்துக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தார். போராட்டத்தில் பேசிய அனைவரின் குரலும் தழுதழுத்தது. அறப்போராட்டத்தில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர் திரு.சே.ஜார்ஜ் அவர்கள், பேரவையின் மாநில சிறப்பு ஆலோசகர் திரு.முகமது இஸ்மாயில், மாவட்ட சிறப்பு ஆலோசகர் திரு.அர்ஜுனன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சோகமே உருவாய் இருந்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விரைவில் மீண்டும் பொற்கால ஆட்சி தருவார்கள் என அனைவரும் தெரிவித்தனர்.
மேலும் மதுரை,ஆம்பூர் உட்பட மாநிலம் முழுவதும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையினர் உண்ணாவிரதம் இருந்து தங்களின் எதிர்ப்பை அறவழியில் தெரிவித்தனர்
மேலும் மதுரை,ஆம்பூர் உட்பட மாநிலம் முழுவதும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையினர் உண்ணாவிரதம் இருந்து தங்களின் எதிர்ப்பை அறவழியில் தெரிவித்தனர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை