ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க, மின் வாரியத்தில், புதிதாக, 5,000 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
88ஆயிரம் பேர்:மின் வாரியத்தில், அதிகாரி, பொறியாளர், உதவியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்களுக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது, 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். 50 ஆயிரம் பணிஇடங்கள் காலியாக உள்ளன.ஊழியர் பற்றாக்குறையால், மின் வினியோகம், பராமரிப்பு உள்ளிட்ட ஏராளமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, 'காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்' என, மின்வாரிய தொழிற்சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, 4,000 கள உதவியாளர்கள், 1,000 கணக்கீட்டாளர்கள், 275 உதவி பொறியாளர் கள், 1,000 தொழில்நுட்ப உதவியாளர்கள் என, 6,275 பணிஇடங்கள் நிரப்பப்பட்டன.
மீண்டும் உயர்வு:கடந்த, ஆறு மாதங்களில், மின் வாரியத்தில், இயக்குனர்கள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட, 7,500க்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றனர். இதனால், காலி பணியிடங்கள் எண்ணிக்கை, மீண்டும் கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதையடுத்து, இளநிலை உதவியாளர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, புதிதாக, 5,000 ஊழியர்களை நியமிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நிதி நெருக்கடி:இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள், அடுத்த, மூன்று ஆண்டுகளில், ஓய்வு பெற உள்ளனர். நிதி நெருக்கடி காரணமாக, புதிதாக ஊழியர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது, மின் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதால், அதன் மூலம், மின் வாரியத்தின் வருவாய் பற்றாக்குறை, சரிவடைய வாய்ப்புள்ளது.இதனால், காலி பணியிடங்களால் ஏற்பட்டுள்ள தொய்வை சமாளிக்க, 5,000 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை