Ad Code

Responsive Advertisement

PG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

ஈரோடு மாவட்டத்தில் 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் சனிக்கிழமை வழங்கினார். 

ஈரோடு மாவட்டத்தில் பணி நியமன ஆணைக்கான கலந்தாய்வு ஈரோடு, 
திண்டல் வேளாளர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த கவுன்சலிங்கில் மொத்தம் 81 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 60 முதுகலை ஆசிரியர்காலிப்பணியிடங்கள் உள்ளதாக அரசுக்கு பட்டியல்  அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 40 முதுகலை ஆசிரியர்  பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அரசு அனுமதியளித்து பள்ளி வாரிய பட்டியலை அனுப்பி வைத்தது. எனவே, சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் பணி நியமன ஆணைக்கான கலந்தாய்வில் 40முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பணி நியமனஆணை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 81 ஆசிரியர்களில்பணி நியமன ஆணை பெற்ற 40 முதுகலை ஆசிரியர்கள் போக மீதமுள்ள 41முதுகலை ஆசிரியர்கள் வெளிமாவட்டத்தில் பணி நியமனம் 
செய்யப்படவுள்ளனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement