ஈரோடு மாவட்டத்தில் 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் சனிக்கிழமை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் பணி நியமன ஆணைக்கான கலந்தாய்வு ஈரோடு,
திண்டல் வேளாளர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த கவுன்சலிங்கில் மொத்தம் 81 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 60 முதுகலை ஆசிரியர்காலிப்பணியிடங்கள் உள்ளதாக அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 40 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அரசு அனுமதியளித்து பள்ளி வாரிய பட்டியலை அனுப்பி வைத்தது. எனவே, சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் பணி நியமன ஆணைக்கான கலந்தாய்வில் 40முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பணி நியமனஆணை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 81 ஆசிரியர்களில்பணி நியமன ஆணை பெற்ற 40 முதுகலை ஆசிரியர்கள் போக மீதமுள்ள 41முதுகலை ஆசிரியர்கள் வெளிமாவட்டத்தில் பணி நியமனம்
செய்யப்படவுள்ளனர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை