தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே 2-ஆம் வகுப்பு மாணவரின் கண் பாதிக்கப்படக் காரணமாக இருந்த தனியார் பள்ளி ஆசிரியை, சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அந்தப் பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித் துறை அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.
இதுகுறித்து, மாணவரின் பெரியப்பா குமார் அளித்த புகாரின்பேரில், சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாகிவிட்ட ஆசிரியை அருள்ஜோதியை தேடி வருகின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ச.கண்ணையன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பேபி ஆகியோர் சம்பவம் குறித்து சனிக்கிழமை விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியை அருள்ஜோதி இரும்பு ஸ்கேலால் மாணவரை அடித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து கண்ணையன் உத்தரவிட்டார். மேலும், பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அவர் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்தார்.
கல்வித் துறை அதிகாரிகளிடமிருந்து, தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை