Ad Code

Responsive Advertisement

தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அனைத்திந்திய ஆசிரியர் பேரவை கோரிக்கை - பள்ளிக்கல்வி அமைச்சர், முதன்மை செயலர் ஆகியோரை மாநிலப் பொதுச்செயலாளர் திரு.ஜார்ஜ் நேரில் வலியுறுத்தல்

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின்  மாநில பொதுச்செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள்,   மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்கள், அரசு முதன்மை செயலர் திரு.சபீதா அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.ராமேஸ்வரமுருகன் அவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் பணிப்புரிந்து  வரும் தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் உடன் அழைத்துச் சென்று ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறித்தினார். மேலும் அணைத்து மாவட்டகளில் இருந்து புதுப்பெயர் பட்டியல் தயாரிக்க ஆவணம் செய்யுமாறு  வலியுறித்தினார். கோரிக்கையை பரிசீலித்து   உரிய நடவடிக்கை எடுப்பதாக அனைவரும் உறுதி அளித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement