''தொழிலாளர் சேமநல நிதியான இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.75 சதவீத வட்டி வழங்கப்படும்,'' என, சேமநல நிதி அமைப்பின் மத்திய ஆணையர் ஜலான் கூறினார். தொழிலாளர் சேமநல நிதி டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில் (2014 15) வழங்கப்பட உள்ள வட்டி வீதம் குறித்து முடிவு செய்ய, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின், மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் சேமநல நிதி சந்தாதாரர்களின் டிபாசிட்களுக்கு, கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த நிதியாண்டும், 8.75 சதவீத வட்டி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சேமநல நிதி அமைப்பின், மத்திய ஆணையர் ஜலான் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ''வட்டி வீதம் குறித்த முறையான அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சகம், பின் வெளியிடும்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை