Ad Code

Responsive Advertisement

இ.பி.எப்., டிபாசிட்களுக்கு 8.75 சதவீத வட்டி நிர்ணயம்

''தொழிலாளர் சேமநல நிதியான இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.75 சதவீத வட்டி வழங்கப்படும்,'' என, சேமநல நிதி அமைப்பின் மத்திய ஆணையர் ஜலான் கூறினார். தொழிலாளர் சேமநல நிதி டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில் (2014 15) வழங்கப்பட உள்ள வட்டி வீதம் குறித்து முடிவு செய்ய, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின், மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் சேமநல நிதி சந்தாதாரர்களின் டிபாசிட்களுக்கு, கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த நிதியாண்டும், 8.75 சதவீத வட்டி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சேமநல நிதி அமைப்பின், மத்திய ஆணையர் ஜலான் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ''வட்டி வீதம் குறித்த முறையான அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சகம், பின் வெளியிடும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement