பொதுப்பணித் துறை உள்ளிட்ட, சில துறைகளில், 98 இன்ஜினியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, இன்று நடக்கிறது. இத்தேர்வை, 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, விருப்ப பாட தேர்வும், பிற்பகல், 2:30 மணி முதல், 4:30 வரை, பொது அறிவு தேர்வும் நடக்கிறது.
முதல் தேர்வு, 300 மதிப்பெண்ணுக்கும், இரண்டாவது தேர்வு, 200 மதிப்பெண்ணுக்கும் நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்குப் பின், 70 மதிப்பெண்ணுக்கு, நேர்முகத் தேர்வு நடக்கும். மொத்தத்தில், 570 மதிப்பெண்ணுக்கு, தேர்வர் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), தலைவர், பாலசுப்ரமணியன், விரிவாக செய்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை