தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 21ம் தேதி துவங்கியது. அரசு, சுய நிதி கல்லூரிகளில், 253 எம்.பி.பி.எஸ்., மற்றும் 1,036 பி.டி.எஸ்., இடங்களும் இருந்தன. ஐந்தாம் நாளான நேற்று, 314 பி.டி.எஸ்., இடங்களுடன் கலந்தாய்வு முடிந்தது. பிற்பகலில், அனைத்து இடங்களும் நிரம்பின.
முதற்கட்ட கலந்தாய்வில், 2,552 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 75 பி.டி.எஸ்., இடங்களும் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில், ஐந்து மருத்துவக் கல்லூரிகளில், 750 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை. இதற்கு அனுமதி கிடைத்தால், மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், ''சுய நிதி கல்லூரிகளில் அனுமதி கிடைத்தாலோ, அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள், மாநிலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டாலோ, இடங்களுக்கு ஏற்ப, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, செப்டம்பரில் நடத்தப்படும்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை