மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபரின் பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.
நான் பிஎச்.டி., படிக்கவில்லை. பல்கலை மானியக்குழு விதிப்படி என்னை முதல்வராக நியமித்தது தவறு என பேராசிரியர் டேவிட் அமிர்தராஜன் ஐகோர்ட்டில் மனு செய்தார். காரைக்குடி அழகப்பா பல்கலை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக்குழு 2012 ஜூலை 19 ல், என் பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறுவதாகவும், கல்வியியலில் மட்டும் பட்டம் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. போதிய விளக்கம் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அறிவிப்பை பரிசீலிக்கக்கோரி, பல்கலைக்கு விண்ணப்பித்தேன்.
ஆவணங்கள்படி முடிவு எடுத்ததாகவும், எந்த விளக்கமும் தேவையில்லை எனவும் கூறி, பிஎச்.டி.,யை திரும்ப ஒப்படைக்க பல்கலை உத்தரவிட்டது. இது இயற்கை நீதிக்கு முரணானது. பல்கலை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.பேராசிரியர் டேவிட் அமிர்தராஜன், தவமணி கிறிஸ்டோபரை முதல்வராக நியமித்ததற்கு, அங்கீகாரம் வழங்கிய, மதுரை காமராஜ் பல்கலை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு செய்தார்.
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: பிஎச்.டி.,யை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தவமணி கிறிஸ்டோபருக்கு, தகுதி அடிப்படையில் பல்கலை பதிவாளர் நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற வேண்டும். பதிவாளர் 4 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள், தேவைப்படின் ஐகோர்ட்டை அணுகி பரிகாரம் தேடலாம்.
டேவிட் அமிர்தராஜன் மனுவைப் பொறுத்தவரை, அழகப்பா பல்கலை தவமணி கிறிஸ்டோபரின் பிஎச்.டி., குறித்து முடிவு செய்து அளிக்கும் சான்றிதழ் பற்றி, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,)யுடன் மதுரை காமராஜ் பல்கலை ஆலோசித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்படி, முதல்வரின் நியமனம் இருக்கும். அதுவரை, தவமணி கிறிஸ்டோபர் முதல்வராக தொடரலாம். மனுக்கள் பைசல் செய்யப்படுகின்றன என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை