வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முழு நேரப் பணியாளர்களாக கல்விப் பணி ஆற்றி வருகின்றனர்.
நகராட்சியில் முன்பு வரி வசூலிப்பவர்கள் செய்து வந்த பணியை ஆசிரியர்கள் செய்ய வேண்டி உள்ளதால் கல்விப்பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் இந்த ஆண்டு குறைந்த சேர்க்கையே இதற்கு எடுத்துக்காட்டு. தேர்தல் ஆணையம் 13 வகையான அரசு ஊழியர்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி இருப்பதால் ஏழை குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை