Ad Code

Responsive Advertisement

குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் : உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர்கள் குறைவான மதிப்பெண்பெற்றாலும் அவர்களுக்கு கல்வி கடன்வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்குசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுதிருப்பூர்மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர்தாக்கல் செய்த மனுவை விசாரித்தநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 12ம் வகுப்பில் 59% மதிப்பெண்கள் பெற்றதனது மகனுக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகியதாகமனுதாரர் ரவி தெரிவித்துள்ளார்ஆனால்60% மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமேகடன் வழங்க முடியும் என்று கூறிஅந்தவங்கி கடன் வழங்க மறுத்து விட்டதாகமனுவில் அவர் கூறியுள்ளார்.



வழக்கை விசாரித்த தனி நீதிபதிமனுதாரருக்கு கல்வி கடன் வழங்கஉத்தரவிட்டிருந்தார்தனி நீதிபதிஉத்தரவை எதிர்த்து சமந்தப்பட்ட வங்கிசார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார்சத்திய நாராயணன்ஆகியோர் அடங்கிய அமர்வுபொருளாதரத்தில் பின்தங்கியுள்ளமாணவர்களை மேம்படுத்தவே கல்விகடன் திட்டம் கொண்டுவரப்பட்டதாககூறினர்கல்வி கடனுக்கு வங்கிகள் வட்டிவசூல் செய்யும் நிலையில் 60%மதிப்பெண் என்ற வரம்பை நிர்ணயம்செய்யக்கூடாது எனக் கூறி வங்கியின்மேல் முறையிட்டு மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement