ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் மேட்டுக்கற்களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
மேட்டுக்கற்களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில், மாணவர்கள் இல்லாததால், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளை வைத்து பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியை ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியில் சேர வயது வராத குழந்தைகளை (அங்கன்வாடி) வைத்து மாணவர்களே இல்லாமல் பள்ளியை நடத்தி வந்தது தெரியவந்ததால், பள்ளியை தற்காலிகமாக மூட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது. இது குறித்து உதவி தொடக்ககல்வி அலுவலர் லீலா கூறுகையில், ''மாணவர்கள் இல்லாமல் செயல்பட்டு வந்ததால், தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மூடப்பட்ட பள்ளியில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் சேரும் பட்சத்தில் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை