அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இன்ஜினியரிங் மாணவர்களுக்கான முதல் நாள் கவுன்சிலிங்கில், 984 பேர் விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்தனர்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், இன்ஜினியரிங் மாணவர்கள் சேர்க்கைக்கான, இருநாள் கவுன்சிலிங், நேற்று துவங்கியது. 2,545 விண்ணப்பங்கள் வந்த நிலையில், தகுதி இல்லாதவை மற்றும் வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பம் என, நீக்கப்பட்டு, 2,150 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் நாளான நேற்று, 984 பேர் பங்கேற்று, விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்தனர்.இதில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சிவராமகிருஷ்ணன், கவுன்சிலிங் 'கட் - ஆப்' 191.25 மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், துர்கா தேவி இரண்டாமிடத்தையும், லோகேஷ்குமார் மூன்றாமிடமும் பிடித்தனர்.வேளாண்மை படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 14ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை