இந்த நிதியாண்டிலேயே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் வெள்ளிக்கிழமை எழுதிய கடித விவரம்:
மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளை படிப்படியாகத் தொடங்க உள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். மத்திய சுகாதார அமைச்சரிடம் இருந்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கு ஏற்ற 3 அல்லது 4 இடங்களைத் தேர்வு செய்யுமாறு கடிதம் வந்துள்ளது.
இந்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, இந்த நிதியாண்டில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்க உள்ள முதல் கட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசு கேட்டுள்ளவாறு தேவையான சாலை வசதிகளுடன் கூடிய நிலங்களை காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலும், புதுகோட்டையிலும், தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டியிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும், மதுரை மாவட்டம் தோப்பூரிலும் அடையாளம் கண்டுள்ளோம்.
இந்த நிலங்கள் மாநில அரசிடமும், அரசு நிறுவனங்களிடமும் உள்ளன. இந்த 5 இடங்களிலும் நல்ல தண்ணீர் வசதியும், மின்சார வசதியும், ரயில், விமானப் போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
இதுதொடர்பாக மத்திய அரசுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் வழங்குமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். தரமான மருத்துவக் கல்வி வழங்குவதற்கும், ஏழைகள், நடுத்தர மக்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதற்கும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தரத்தில் ஒரு மருத்துவமனை அமைவதை உறுதிசெய்ய ஆர்வமாக உள்ளேன்.
இதுபோன்ற திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், இந்த நிதியாண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை