''சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புவோருக்கு, தமிழ் புத்தாண்டு அன்று, இளங்கோவடிகள் விருது வழங்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
இளங்கோவடிகள் நடையையொட்டி, புதிய காப்பியம் படைப்போருக்கோ, சிலப்பதிகாரத்தின் புகழ் பாடுவோருக்கோ, இளங்கோவடிகள் விருது வழங்கப்படும். தமிழ் புத்தாண்டு அன்று வழங்கப்படும் இந்த விருது, 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 1 சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது.
# தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும், ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ் செம்மல் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுக்கு, மாவட்டத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுவர். இது, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், தகுதியுரை விருது உள்ளடக்கியது.
# தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில், 15 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
# சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், சுடுமண், சுதை சிற்பம், மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு, படிமங்களாக வடிவமைத்த, கலைப் பொருட்களைக் கொண்டு, பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம், 2.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
இவ்வாறு, அவர் அறிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை