பள்ளி கல்வித் துறையில், 809 இளநிலை உதவியாளர்கள், அவரவர் சொந்த மாவட்டங்களில், நேற்று பணி நியமனம் செய்யப்பட்டனர். பள்ளி கல்வித் துறைக்கு, 1,395 இளநிலை உதவியாளர் பணியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி., ஒதுக்கீடு செய்தது. இவர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில், நேற்று நடந்தது.
முதலில், மாவட்டங்களுக்குள் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நேற்று, 'ஆன்-லைன்' வழியில் நடந்தது. இதில், 809 பேர், அவரவர் சொந்த மாவட்டங்களில் இருந்த காலி பணியிடங்களை தேர்வு செய்தனர். இவர்கள் அனைவருக்கும், நேற்றே, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சொந்த மாவட்டத்திற்குள் காலி பணியிடம் கிடைக்காதவர்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் பணியாற்ற விரும்பும் தேர்வர்களுக்கான கலந்தாய்வு, இன்று நடக்கிறது. இதில், 586 பேர், பணி நியமனம் செய்யப்படுவர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை