Ad Code

Responsive Advertisement

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் யுஜிசி கல்வி உதவித் தொகை திட்டங்கள்: அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்ப்பு

பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்ட பயனாளிகள் பட்டியலில் அரவாணிகளை மூன்றாவது பாலினமாக சேர்த்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், யுஜிசி சார்பில் வழங்கப்படும் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டங்களில் அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மையினர் பட்டியலில் ஜெயின்கள்:

இதுபோல் மத்திய சிறுபான்மையின நலத் துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சிறுபான்மையின சமூகப் பட்டியலில் ஜெயின் சமூகப் பிரிவும் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கெனவே, கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த சமூகம் மற்றும் பார்சி ஆகிய 5 சமூகப் பிரிவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என யுஜிசி அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement