பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்ட பயனாளிகள் பட்டியலில் அரவாணிகளை மூன்றாவது பாலினமாக சேர்த்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், யுஜிசி சார்பில் வழங்கப்படும் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டங்களில் அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் பட்டியலில் ஜெயின்கள்:
இதுபோல் மத்திய சிறுபான்மையின நலத் துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சிறுபான்மையின சமூகப் பட்டியலில் ஜெயின் சமூகப் பிரிவும் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கெனவே, கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த சமூகம் மற்றும் பார்சி ஆகிய 5 சமூகப் பிரிவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என யுஜிசி அறிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை