''முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களை, கிராமப் புற மருத்துவ பணிக்கு அனுப்புவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.
லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:முதுகலை மருத்துவ படிப்பு முடித்தவர்களை, கிராமப்புற பணிக்கு அனுப்புவது என, முந்தைய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அந்த திட்டம் அமலுக்கு வரவில்லை.முந்தைய அரசின் திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, தற்போதைய அரசு பரிசீலித்து வருகிறது. முதுகலை மருத்துவ படிப்பை முடித்தவர்களுக்குப் பதிலாக, முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களேயே, கிராமப்புற பணிக்கு அனுப்புவது தொடர்பாக, சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினருடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.மருத்துவ மாணவர்களை, கிராமப்புற பணிக்கு அனுப்புவது தொடர்பாக, 18 மாநிலங்களில் உள்ள, 184 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.இதுதொடர்பாக, விரைவில் முடிவு எடுக்கப்படும் என, நம்புகிறேன்.
முதுகலை மருத்துவ மாணவர்களை, கிராமப்புற பணிக்கு அனுப்புவதன் மூலம், ஆரம்ப சுகாதார நிலையங்களில், போதிய அளவில், டாக்டர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.மேலும், முதுகலை மருத்துவம் படிக்கும் போது, கிராமப்புற பணிக்கு செல்லும் மாணவர்களுக்கு, போட்டித் தேர்வுகளில், 30 சதவீத போனஸ் மதிப்பெண் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. மாநிலங்களில் மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. அதனால், பின்தங்கிய மாவட்டங்களில், சுகாதார மையங்களை அமைக்க உதவி வருகிறது. மேலும், புதிதாக பிறக்கும் குழந்தைகள் இறக்காமல் தடுக்க, கணிசமான அளவுக்கு உபகரணங்களும் வழங்கப்படும்.இவ்வாறு, ஹர்ஷ்வர்த்தன் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை