இந்தியப் பல்கலைகளில், தரமான ஆசிரியர்களின் பற்றாக்குறை இருப்பதால்தான், நமது உயர்கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதும், திறன்வாய்ந்த ஆசிரியர்களை ஈர்ப்பதும் நம் முன்னே உள்ள பெரிய சவால்கள்.
ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் துறைகள் அல்லது வெளிநாடுகளிலிருந்து தகுதியுள்ள நபர்களை, குறுகியகால பணி அடிப்படையில் நியமிப்பதன் மூலம், அதிக காலிப் பணியிட பிரச்சினைகளை தீர்க்க முடியும் மற்றும் இதன்மூலமாக தரமும் பாதிக்கப்படாது.
செமினார்கள் மற்றும் ஒர்க் ஷாப்புகளில் கலந்துகொள்ளவும், கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கு பங்களிக்கவும், ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம், அவர்களின் தரத்தை அதிகப்படுத்த முடியும்.
உயர்கல்வி ஆசிரியர்களின் தரம் சிறப்பாக இருந்தால்தான், நம்மால் அத்துறையில் நினைத்த இலக்கினை அடைய முடியும். இதற்கென பலவித திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ்ரூம் போன்ற நவீன வசதிகளை கிடைக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை