மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கவுன்சிலிங் நாளை துவங்க உள்ள நிலையில், 'கட் ஆப்' விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை (ஜூலை 21) முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள், முதற்கட்ட கவுன்சிலிங்கில் விடுபட்ட இடங்கள் என 253 இடங்களுக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இந்த கவுன்சிலில் நடைபெறும். அரசு மற்றும் உதவிபெறும் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களில் பொதுப் பிரிவுக்கு 47 இடங்கள், பி.சி., 49, பி.சி., (முஸ்லிம்) 5, எம்.பி.சி., 30, எஸ்.சி., 25, எஸ்.சி., (அருந்ததியினர்) 5, பழங்குடியினர் 2 இடங்கள் உள்ளன. இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் பொதுப்பிரிவு 20, பி.சி., 17, பி.சி., (முஸ்லிம்) 2, எம்.பி.சி., 13, எஸ்.சி., 10, எஸ்.சி., (அருந்ததியினர்) 2, எஸ்.டி., 1 இடம் உள்ளது. சுயநிதி மருத்துவ கல்லூரிகளைப் பொறுத்தவரை, கோவை பி.எஸ்.ஜி., கல்லூரியில் 1, கன்னியாகுமரி மூகாம்பிகை கல்லூரியில் 2, சென்னை கற்பக விநாயகர் கல்லூரியில் 5, கோவை கற்பகம் கல்லூரியில் 7, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 4, மதுரை வேலம்மாள் கல்லூரியில் 6 இடங்கள் என, மொத்தம் 25 இடங்கள் உள்ளன.
மருத்துவம் 'கட் ஆப்':
2ம் கட்ட கவுன்சிலிங்கில் 'கட்ஆப்' பொது பிரிவு மற்றும் பிற்பட்டோர் பிரிவில் 199.25 முதல் 198.25 வரை உள்ளது. இதில் பி.சி.,முஸ்லிம் 197 வரை; எம்.பி.சி., 197.5 வரை; எஸ்.சி., 194.25 வரை; எஸ்.சி., (அருந்ததியினர்) 191.5 வரை; எஸ்.டி., 186.5 வரை பங்கேற்பர்.
பல் மருத்துவம் 'கட் ஆப்':
பல் மருத்துவத்திற்கு ஜூலை 22 முதல் 2ம் கட்ட கவுன்சிலிங் நடக்க உள்ளது. இதற்கான 'கட் ஆப்' வருமாறு: பொதுப் பிரிவு 197.75, பி.சி., (முஸ்லிம்) 196.5, எம்.பி.சி., 196.5, எஸ்.சி., 192.25, எஸ்.சி., (அருந்ததியினர்) 189, எஸ்.டி., 181 வரை பங்கேற்பர். பிளஸ்2 மதிப்பெண் சரிபார்ப்பு, மறுமதிப்பீடு, மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள், அதன் அடிப்படையில் இதில் பங்கேற்கலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை