Ad Code

Responsive Advertisement

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: அனைத்து இடங்களும் நிரம்பின


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி உள்பட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,020 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் என அனைத்தும் 2ஆம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உரிய கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement