திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டுள்ளது.திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம், 2007ல் துவங்கப்பட்டது.
துவக்க காலத்தில், இட வசதி இல்லாததால், கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், இப்பல்கலை தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.இந்நிலையில், திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள நீலக்குடியில், 500 ஏக்கர் பரப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு, துணைவேந்தர், பேராசிரியர்கள், அலுவலர் குடியிருப்புகள் மற்றும் மாணவ, மாணவியர் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன.
இதன் திறப்புவிழா, இம்மாதம் 19ம் தேதி நடைபெற இருந்தது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைப்பார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆயத்த பணிகள் நடந்து வந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.கட்டடப் பணிகள் முழுமையடையாததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என, பல்கலை தரப்பினர் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை