மதுரை, : தமிழக அரசின் கல்வி மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட, புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஆசிரியர் பேரவை வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் கல்வி மானியக் கோரிக்கையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகை வழங்கியுள்ளது. இதனை அனைத்திந்திய ஆசிரியர் பேரவை வரவேற்றுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜார்ஜ் விடுத்துள்ள அறிக்கை: பெண் குழந்தைககளின் பாதுகாப் பை கருத்தில் கொண்டு, குறிப்பாக பழங்குடியின 482 பள்ளிகளில், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில், 4 ஆயிரத்து 782 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கொடுப்பதை வரவேற்கிறது. மேலும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி போதிக்க சிறப்பு ஆசிரியர்கள நியமனம், 3,459 ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர்கள் நியமனம், ஈட்டு சிறப்பு விடுப்பு, அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள பள்ளிகளில் பொது நூலக தகவல் மேசை’ ஆகிய பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கல்வி வளர்ச் சியானது அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும், மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளதை வரவேற்கிறோம்’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை