சட்டசபையில், கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கைமீது நடந்த விவாதம்:
தே.மு.தி.க., செந்தில்குமார்:
கூட்டுறவு வங்கிகளில், போதிய பணியாளர்கள் இல்லாமல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதை சீர்செய்ய வேண்டும்.
அமைச்சர் செல்லூர் ராஜு:
கூட்டுறவு வங்கிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிர்ப்ப, 2013ல் தேர்வு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த 15ம் தேதி, தீர்ப்பு வெளியாகி உள்ளது. எனவே, காலி பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்.
செந்தில்குமார்: 1,000 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளில், பில் போடுவது, பொருட்களை நிறுத்துக் கொடுப்பது போன்ற வேலைகளை, ஒரு பணியாளரே செய்கிறார். இதனால், பொருட்கள் வழங்குவதில், நீண்ட தாமதம் ஏற்படுகிறது. எனவே,கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
அமைச்சர்: கிராமப்புறங்களில், 1,000 கார்டுகளும், நகர்ப்புறங்களில், 500 கார்டுகளும் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு, கூடுதல் பணியாளர்கள் நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, இதுபோன்ற கடைகளுக்கு, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு, விவாதம் நடந்தது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை