Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் இல்லாமல் வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு!! - வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள்

வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு

வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் ராமகோவிந்தன் காடு ஊராட்சி ஒன்றியப் தொடக்கப்பள்ளி உள்ளது. அரை நூற்றாண்டை கடந்த இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும், ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவி இரு மாணவர்களும் ஆக 4 பேர் படித்து வந்தனர்.

இந்நிலையில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயின்ற மூன்று மாணவர்கள் தேர்ச்சியடைந்து ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். பள்ளியில் இருந்த ஒரே ஒரு மாணவனையும் அவனது பெற்றோர் வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்று சான்றிதழை வாங்கி சென்று விட்டார்.

இதனால் இந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் இருவர் பணியில் இருந்தும் மாணவர்கள் யாரும் இல்லாததால் பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாணவனைத் தவிர மாணவர்கள் சேர்க்கை என்பது பூஜ்யமாக இருந்து வந்தது.

தமிழ்வழி கல்வி கற்பிக்கப்பட்டு வந்த இந்த பள்ளியை நிரந்தரமாக மூடாமல் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியை தொடர்ந்து இயக்க வேண்டுமென இந்த கிராம மக்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் இந்த பள்ளி 1 மற்றும் 2–ம் வகுப்புகளில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக் கல்விப் பள்ளியாக மாற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று மீண்டும் இந்த பள்ளி தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்வழி கல்வியை தமிழ்நாட்டில் மெல்ல சாகடிக்கும் நிகழ்வாகவே ஆங்கில வழி கல்வி முறை தொடங்கி இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அரசும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா, துணைஆசிரியர் சுப்பிரமணியன் இருவரும் வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பள்ளி மீண்டும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். மூடிய பள்ளியை மீண்டும் திறந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் ராமகோவிந்தன் காடு ஊராட்சி ஒன்றியப் தொடக்கப்பள்ளி உள்ளது. அரை நூற்றாண்டை கடந்த இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும், ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவி இரு மாணவர்களும் ஆக 4 பேர் படித்து வந்தனர்.
இந்நிலையில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயின்ற மூன்று மாணவர்கள் தேர்ச்சியடைந்து ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். பள்ளியில் இருந்த ஒரே ஒரு மாணவனையும் அவனது பெற்றோர் வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்று சான்றிதழை வாங்கி சென்று விட்டார்.
இதனால் இந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் இருவர் பணியில் இருந்தும் மாணவர்கள் யாரும் இல்லாததால் பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாணவனைத் தவிர மாணவர்கள் சேர்க்கை என்பது பூஜ்யமாக இருந்து வந்தது.
தமிழ்வழி கல்வி கற்பிக்கப்பட்டு வந்த இந்த பள்ளியை நிரந்தரமாக மூடாமல் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியை தொடர்ந்து இயக்க வேண்டுமென இந்த கிராம மக்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் இந்த பள்ளி 1 மற்றும் 2–ம் வகுப்புகளில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக் கல்விப் பள்ளியாக மாற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று மீண்டும் இந்த பள்ளி தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்வழி கல்வியை தமிழ்நாட்டில் மெல்ல சாகடிக்கும் நிகழ்வாகவே ஆங்கில வழி கல்வி முறை தொடங்கி இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அரசும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா, துணைஆசிரியர் சுப்பிரமணியன் இருவரும் வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பள்ளி மீண்டும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். மூடிய பள்ளியை மீண்டும் திறந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement