ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி தலைமை தாங்கினார். நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பசுவந்தனை பள்ளி தலைமை ஆசிரியர் சூலியனடெய்சிமேரி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 76 மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள், சீருடை உட்பட பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுவது உலகத்திலேயே எந்த நாட்டிலும் கிடையாது. தமிழக முதல்வர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப் டாப் வழங்குவதற்காக ரூ.1850 கோடியை ஆண்டு தோறும் வழங்கி வருகிறார். இந்த லேப் டாப்பை மேல் கல்வி படிப்பிற்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். வரும் நிதியாண்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை