அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 84.38 லட்சம் பேர் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள் மட்டும் 43 லட்சத்து 12 ஆயிரம் பேர்.
பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் முதல் ஆசிரியர் பட்டப் படிப்பு படித்தவர் வரை மட்டும் 77 லட்சம் பேர் இருக்கின்றனர். அதிலேயே கலை, அறிவியல், வணிகம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆவர்.
அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் நிரப்பப்படுகின்றன. அரசுத் துறைகளில் ஏற்படும் காலியிடங்கள் குறித்த பட்டியல் பெறப்பட்டு அவை பூர்த்தி செய்யப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிகாரிகள் நிலையிலான பதவிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமே மட்டுமே நிரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை