பெங்களூருவில் உள்ள அரசு கல்லூரிகளில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கர்நாடக செய்தித் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்தார்.
குறைந்த விலையில் மதிய உணவு அளிப்பது குறித்து முதல்வர் சித்தராமையாவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் உயர் கல்வி அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பார்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், 5 ரூபாயில் மாணவர்கள் மட்டுமன்றி, 10 ரூபாயில் ஆசிரியர்களுக்கும் உணவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
பெங்களூருவில் உள்ள அரசு கல்லூரிகளில் ஊரகங்களில் உள்ள ஏழை மாணவர்கள் வந்து படிக்கின்றனர்.
அவர்கள் காலை 6 மணிக்கே தங்களது வீட்டிலிருந்து புறப்படுவதால், மதிய உணவை கொண்டு வர இயலாது.
எனவே, குறைந்த விலையில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
மேலும், மகாத்மா காந்தியின் தத்துவங்களை இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை