Ad Code

Responsive Advertisement

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்களுக்காக வரும் 5-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் நிறுவனங்களுக்காக வரும்5-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்துவதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீனிவாசா அவின்யூ சாலையில் அமைந்துள்ள செட்டிநாடு ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் வரும் 5-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8-ம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம் மற்றம் முதுகலை பட்டம் படித்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் முகாமில் கலந்துகொள்ள தகுதி பெறுகின்றனர். தனியார் நிறுவனங்களில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுயவிவர தகவலுடன் நேரில் கலந்துகொள்ளும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement