சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் நிறுவனங்களுக்காக வரும்5-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்துவதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீனிவாசா அவின்யூ சாலையில் அமைந்துள்ள செட்டிநாடு ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் வரும் 5-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8-ம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம் மற்றம் முதுகலை பட்டம் படித்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் முகாமில் கலந்துகொள்ள தகுதி பெறுகின்றனர். தனியார் நிறுவனங்களில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுயவிவர தகவலுடன் நேரில் கலந்துகொள்ளும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை