மத்திய பட்ஜெட்டில் கிடைத்துள்ளவரிச்சலுகையால் மாதச் சம்பளம் பெறும்பிரிவினருக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
2014 - 15 பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு 60 வயதுக்குஉள்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்துரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 2.5லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகஉயர்த்தப்பட்டுள்ளது.
அதே போன்று வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் உள்ள முதலீட்டுத் திட்டங்களானபொது வருங்கால வைப்பு நிதி, காப்பீடு,நிரந்தர வைப்பு, வருங்கால வைப்பு நிதிஆகியவற்றில் இதுவரை ரூ.1 லட்சம் வரைமுதலீடு செய்வோருக்கு மட்டுமே வரிவிலக்கு இருந்தது.
இப்போது ரூ.50 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடுசெய்வோருக்கு வரி விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.
சொந்தமாக குடியேறியுள்ள வர்களின்வீட்டுக் கடனுக்கான வட்டி மீதான வரிவிலக்கு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மூன்று முறைகளிலும் வரிச்சலுகையை பெறுவோரால் அதிகபட்சமாகரூ.39 ஆயிரத்து 655 வரை சேமிக்க முடியும்என்று நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்றுதெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை