ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, மாணவர்கள் வராததால், 2 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன.
திருவாடானை ஒன்றியத்தில் உள்ள பல அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இல்லாததால் பள்ளிகள் மூடப்படுவது தொடர்கிறது. கடந்த மாதம் கிளியூர் பள்ளியும், நேற்று முன்தினம் கீழக்கோட்டை மற்றும் அறிவித்தி ஆகிய 2 கிராமங்களில் உள்ளஅரசு தொடக்கப்பள்ளிகளும் மூடப்பட்டன. ஆங்கில கல்வி மோகத்தாலும், தங்களது குழந்தைகளை வீட்டிலிருந்து வேனில் ஏற்றி சென்று, மாலையில் வீட்டருகே பாதுகாப்பாக இறக்கி விடுவதாலும், பெற்றோர்கள், திருவாடானையில் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். திருவாடானை உதவிக்கல்வி அலுவலர் வாசுகி கூறியதாவது: தொடர்ந்து மாணவர்கள் வராததால், கீழக்கோட்டை, அறிவித்தி கிராம தொடக்கப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கீழக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியை, தினைக்காத்தான் வயல் பள்ளிக்கும், அறிவித்தி பள்ளி தலைமை ஆசிரியர், வேறு பள்ளிக்கும் இடமாறுதல் பெற்று சென்று விட்டனர். குறைந்தது 20 மாணவர்களாவது சேரும் பட்சத்தில், மீண்டும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, 10 குழந்தைகளுக்கு கீழ் படிக்கும் பள்ளிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது, என்றார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை