வரும் 2015ம் ஆண்டிற்குள், நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை கிடைக்க செய்துவிட வேண்டுமென்ற லட்சியம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று யுனெஸ்கோ அமைப்பினுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் பற்றி, Education for All (EFA) என்ற பெயரில், யுனெஸ்கோ அமைப்பு, ஒரு உலகளாவிய ஆய்வு நடத்தியது. அதில்தான், மேற்கண்ட விபரம் தெரியவந்துள்ளது. குழந்தைகளை ஆரம்ப பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கையில், மிகவும் எளிய நாடுகளான நேபாளமும், புருண்டியும் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
உலகளாவிய அளவில் பள்ளிக்கு செல்லாத 43% குழந்தைகளில், ஆண்களின் எண்ணிக்கை 1 கோடி. பெண்களின் எண்ணிக்கை 1.5 கோடி. இந்தியா, இந்தோனேஷியா, நைஜர், நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில், ஒவ்வொன்றிலும், 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை