வருகிற 2015-ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள பொறியியல் பட்டதாரி நுண்ணறி தேர்வில் (கேட்) பங்கேற்கும் தேர்வர்களிடம் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக கைரேகை, புகைப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
அரசின் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பொறியியல் படிப்புகளை மேற்கொள்வதற்கு "கேட்" தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஒருசில உயர் கல்வி நிறுவனங்கள் இந்தத் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
2015-ஆம் ஆண்டுக்கான இந்தத் தகுதித் தேர்வு 2015 ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை வார இறுதி நாள்களில் (சனி, ஞாயிறு) நடத்தப்பட உள்ளன.
இந்தத் தேர்வில் பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து அத் தேர்வை நடத்தவுள்ள கான்பூர் ஐஐடி வெளியிட்டுள்ள தகவல்கள்:
தேர்வில் இடம்பெறும் 22 தாள்களும் ஆன்-லைன் தேர்வாக நடத்தப்படும். இதில் சில கேள்விகளுக்கு எண்களில் பதிலளிக்கக் கூடியதாகவும், இதர கேள்விகள் கொள்குறி தேர்வு விடைகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
தேர்வு தொடங்குவதற்கு முன்பாக தேர்வர்களிடம் புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படும். இது அனைத்து தேர்வர்களிடமும் அல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்வர்கள் தேர்வுசெய்யப்பட்டு பதியப்படும்.
விண்ணப்பம், சான்றிதழ்கள் சமர்ப்பிப்பு, தேர்வுக் கட்டணம் செலுத்துதல் அனைத்தும் ஆன்-லைன் மூலம் மட்டுமே பெறப்படும்.
கேட் 2015 தகுதித் தேர்வு மதிப்பெண், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை