Ad Code

Responsive Advertisement

பல்கலைகழக உதவி பேராசிரியர் நியமனம்; அருந்ததியர் இடஒதுக்கீடு அமல்படுத்த உத்தரவு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கல்லமநாயக்கன்பட்டி வினோபா கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கையா ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே 14 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் பின்பற்றப்படவில்லை. இதற்கிடையே, புதிதாக உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நேர்முக தேர்வு நடந்தது. இதிலும் அருந்ததியர்களுக்கு தகுதி இல்லை எனக்கூறி, இதர பிரிவினரை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், வேலுமணி ஆகியோர் விசாரித்து அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை கண்டிப்பான முறையில் அமல்படுத்த பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement