விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கல்லமநாயக்கன்பட்டி வினோபா கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கையா ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே 14 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் பின்பற்றப்படவில்லை. இதற்கிடையே, புதிதாக உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நேர்முக தேர்வு நடந்தது. இதிலும் அருந்ததியர்களுக்கு தகுதி இல்லை எனக்கூறி, இதர பிரிவினரை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், வேலுமணி ஆகியோர் விசாரித்து அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை கண்டிப்பான முறையில் அமல்படுத்த பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை