Ad Code

Responsive Advertisement

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு.

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திருநெல்வேலியில் திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நிகழ் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறஉள்ளது.

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல்) திங்கள்கிழமை (ஜூன் 23) காலை 9.30 மணிக்கும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9.30 மணிக்கும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு புதன்கிழமை (ஜூன் 25) காலை 9.30 மணிக்கும் தொடங்குகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement