அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திருநெல்வேலியில் திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நிகழ் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறஉள்ளது.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல்) திங்கள்கிழமை (ஜூன் 23) காலை 9.30 மணிக்கும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9.30 மணிக்கும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு புதன்கிழமை (ஜூன் 25) காலை 9.30 மணிக்கும் தொடங்குகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை