பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் ஈரோடு மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மாவட்டச் செயலர் மதியழகன் வரவேற்றார். மாநிலப் பொதுச் செயலர் எஸ்.நேரு, மாநிலத்தலைவர் ஆர்.முருகேசன், பொருளாளர் கே.செங்கோட்டுவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 271 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கோபி கல்வி மாவட்டத்தில் தொழிற்கல்வி பாடப் புத்தகங்கள்உடனே விநியோகம் செய்ய வேண்டும்.காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.சந்திரசேகரனுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்டப் பொருளாளர் கே.நாச்சிமுத்து, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.நாச்சிமுத்து, ஜெ.பிரபாகரன், நிர்வாகிகள் உஷா, ரவிச்சந்திரா, வனிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை